8.6.12

பகல் இரவு



காரிருள் மறைக்கும் நிலவிரவு 


வீசும் காற்றில் கொடியின் 
முந்தானை விலக்கும் கிளைகள் 


அரவமற்ற சாலையில் 
ஆண் நாயின் ஊளை


மின்கம்பியிலமர்ந்த 
கோட்டானின் கொக்கரிப்பு 


பறக்கும் விண்மீனாய் 
மின்மினிகள் 


எங்கோ ஒரு ஈர முனகலும்
ஏக்க பெருமூச்சும் 


நள்ளிரவு நளினங்களை 
துயிலாமல்  ரசித்தேன் 


புலர் பொழுது சூரியனும்


பால்காரனின் மிதிவண்டி மணியும் 


பேப்பர் பையனின் "சார்"  


காய்கறிக்காரியின் "மாங்காய்" 


எதுவும் என்னுள் நுழையாதபடி 


சுகித்துறங்கினேன்


நள்ளிரவின் எச்சங்களை 
சுமந்தபடி........................