22.2.11

காக்ளியாவற்ற கருணம்



நான்கு வழிச்சாலையில் 
பயணித்தேன் 

சில ஊர்கள் 
மறைந்தே போயின 

ஓர தேநீர் கடைகளின் 
சுவடுகள் இல்லை 

வீடுகளின் முதல் மாடி
தரைத்தளமாய்

காடுகளின் தடங்கள்
கரைந்திருந்தது  

பயணம் என்னவோ 
சுகமாய்த்தான்  இருந்தது 

குடிசையிழந்தோரின்
கூக்குரல் மட்டும் கேட்கவே இல்லை 
காக்ளியாவற்ற கருணத்தால்.............