18.1.14

ரோஜா மலர்


நீயும் ரோஜாவும் 
இரட்டைக்குழந்தைகள் 

காதலை சொன்னபோது 
அவளைப்போலவே சிவந்தாய் 

வியர்த்தபொழுது 
அவளின் சுகந்தம் 

அணைத்தபோது முட்களாய் 
குத்தியது பூனைமுடிகள்

முத்தமிட்டபோது 
மார்கழி காலையில் 
பறித்தது போல் 
முத்து முத்தாய் 
முகத்தில் பனித்துளிகள் 

உன்னுள் புதைகிறேன் 
என்னையும் சிவக்க வை..........  

2.1.14

கவிதைகளிரண்டு - 5


1)

என் இதயமெழுதிய
கவிதையை விட 
உன் இதழெழுதிய 
கவிதையே அழகடி ..............


2)

நிலவு உமிழ்ந்த 
எச்சிலா நட்சத்திரங்கள் ?
என்று கவிதையாய் கேட்ட 
தீக்க்ஷாகுட்டியே
ஓர் கவிதைதானே !!!..........