கவிஞனாக்கும்
கண்ணீர் வற்றும்
கருப்பு போர்வை
முகத்தை மூடும்
கிழிந்த சட்டை
அணிய பிடிக்கும்
நிலா நினைவுகளை
உடைந்த நட்சத்திரங்களாய்
எண்ணப்பிடிக்கும்
கூதிர் காலத்தில்
உடல் தீயாய் கொதிக்கும்
எவ்வொலி காதில்
கேட்பினும்
அது உன்பெயராய்
ஒலிக்கும்
எப்பெண்ணை பார்க்கினும்
உன் கழுத்து மச்சம் தேடும்
உன் தெற்றுப்பல்லில்
சிக்கிய என் இதயம்
விதியென்னும் கோரப்பற்களில்
சிதையுண்டது
தலையணை நனைய
உப்புக்கரிக்கும் கனவுகளில்
சேர்ந்தே வாழ்கிறோம்
உயிரற்ற உடலாய்
காதல் பிரசவத்தில்
மரித்து பிறந்த
நீலக்குழந்தை
நான் .............