31.7.14

திறல் மிகு



பெருவளியை 
ஈரம் தடவி 
வாடையாக்கு 

தாழ்வுக்கதவின் 
தாழ் 
திற  

எள்ளல்களை 
மதியாது 
மிதி 

நாசியில் 
நம்பிக்கை 
சுவாசி 

லட்சியத்தை 
பிரபஞ்சத்தில் 
கல 

உதிரத்தில் 
உழைப்பு குளோபின் 
சேர் 

வீழ்வை 
எழுந்து 
வாழ்வாக்கு 

எண் திசையிலும் 
உன் பெயர் 
பொறி 





18.7.14


என்னவளே 
**************

ஒற்றை பார்வையில் 
நானெனும் 
அகந்தை அழிந்ததடி 

ஒற்றை வார்த்தையில் 
செவிகள் 
சொர்க்கம் கண்டதடி 

ஒற்றை மூக்குத்தி 
மின்னலில் 
காவியம் பேசுதடி 

ஒற்றை விரல் ஸ்பரிசத்தில்
மூலாதாரம் 
முளைத்து  விழித்ததடி  

ஒற்றை முத்தத்தில் 
கண்மூடி 
காற்றில் கரைந்தேனடி 

ஒற்றை பூவாய் 
நீ வருகையில் 
பூந்தோட்டம் 
உன்னை தொடருமடி

ஒற்றை "ழ" கரமாய் 
நீ பேச 
தமிழ் 
உன்னை சுமக்குமடி ................................
  

11.5.14

யாய்



அன்பு சமைத்து 

ஆசி பெருக்கி 

இதயம் பிழிந்து 

ஈரம் சொரிந்து 

உயிர் வருத்தி 

ஊண் அளித்து

எளிமை பழகி 

ஏசுதல் அற்று 

ஐயம் களைந்து

ஒற்றுமை விதைத்து 

ஓதுதல் உரைத்து 

ஒளடதம் தந்து 

எஃகென காப்பவளே 

அன்னை ...................................

கண்ணீரால் கால்கழுவி 
வணங்குவோம் ................ 

7.5.14

சாரல்


கார்மேகம் 
நிறைசூலுடன்
செஞ்சாமாருதம் வீச 
வருணன் 
பூமியை 
துலக்கிக்கொண்டு 
இருக்கிறான் ................

26.4.14

காதல் மை



இதய வெற்றிடத் தாளில்
உன் பெயரை 
நீலக்கண்ணீரில் 
நனைக்கிறேன் 
கவிதைகளாய் ..............