26.2.14

நம்பிக்கை


கடந்த காலம் கலங்கிப் போயிருந்தாலும் 

நிகழ்காலம் வறண்டு போனாலும் 

எதிர்காலம் எப்பொழுதும் 

தெளிந்த நீராகவேதான்  இருக்கிறது .............................
  

18.1.14

ரோஜா மலர்


நீயும் ரோஜாவும் 
இரட்டைக்குழந்தைகள் 

காதலை சொன்னபோது 
அவளைப்போலவே சிவந்தாய் 

வியர்த்தபொழுது 
அவளின் சுகந்தம் 

அணைத்தபோது முட்களாய் 
குத்தியது பூனைமுடிகள்

முத்தமிட்டபோது 
மார்கழி காலையில் 
பறித்தது போல் 
முத்து முத்தாய் 
முகத்தில் பனித்துளிகள் 

உன்னுள் புதைகிறேன் 
என்னையும் சிவக்க வை..........  

2.1.14

கவிதைகளிரண்டு - 5


1)

என் இதயமெழுதிய
கவிதையை விட 
உன் இதழெழுதிய 
கவிதையே அழகடி ..............


2)

நிலவு உமிழ்ந்த 
எச்சிலா நட்சத்திரங்கள் ?
என்று கவிதையாய் கேட்ட 
தீக்க்ஷாகுட்டியே
ஓர் கவிதைதானே !!!.......... 

28.12.13

கவிதைகளிரண்டு - 4


1)

நிசப்த முத்தமிட எண்ணி  
இட்டபின் ஒலித்த 
இச்சென்பது  
பிரபஞ்சத்துடன் ஆன்மா 
ஒத்திசைந்த 
இசையாக இருக்கலாம்............


2)

மாமா...
என்றழைத்த 
வர்ஷாக்குட்டியின் 
கண்களில் 
GEMS
தெரிந்தது .................


26.11.13

சில ஹைகூக்கள் - 4

1)

பிண ஊர்வலத்தின் 
பின்னால் 
எதிர்கால பிணங்கள் 

2)

ஆற்றின்
கொப்பூழாய்
முழு நிலா 

3)


பதினைந்தே நாட்களில்
பூப்பெய்தும்
அம்புலி