நான்கு வழிச்சாலையில்
பயணித்தேன்
சில ஊர்கள்
மறைந்தே போயின
ஓர தேநீர் கடைகளின்
சுவடுகள் இல்லை
வீடுகளின் முதல் மாடி
தரைத்தளமாய்
காடுகளின் தடங்கள்
கரைந்திருந்தது
பயணம் என்னவோ
சுகமாய்த்தான் இருந்தது
குடிசையிழந்தோரின்
கூக்குரல் மட்டும் கேட்கவே இல்லை
காக்ளியாவற்ற கருணத்தால்.............