30.7.13

ஒளஷதம்



நிர்ச்சலன 
நிசப்த நொடியில் 
ஆலமரத்தடியில் 
மடியில் கிடத்தி 
உதிரம் சூடாகி 
அதரம் சுவைத்தபோது 
மயிர்க்கூச்செறிந்துன் 
பூனை முடிகள் 
குத்திய காதல் வலி 
இன்று 
பிரிவின் சீழ் 
பிடித்து நிற்கிறது 

அடுத்த பிறவியிலாவது 
ஒளஷதமாய் வா............

21.7.13

குட்டிக்கவிதைகள் - 3


1)
சிற்றிதழ் படித்து 
செவ்விலக்கியம் புனைய 
ஆசை இல்லை 

உன் 

பேரிதழ் சுவைத்து
பெருங்காமப்புராணம்
படைக்கவே ஆசை ................



2)

பிழை திருத்த சொன்னதும்
நீதான்

உரை எழுதச்சொன்னதும்
நீதான்

தலைப்பை மட்டும்
தரமறுத்தல்
எவ்விதத்தில் நியாயம் ?

1.7.13

குட்டிக்கவிதைகள் - 2


கடை வாசல் முன்பு 
சுடிதார் இறுக்கி பிடித்து 
பெருக்கும் பெண்களின் 
கைகளில் இருக்கிறது 
ஆண்களின் பார்வை ............

உலகத்திலேயே 
நீளமான 
அகண்ட 
மைதானம் இருக்கிறதென 
அவமானப்பட்டுக் கொள்ளலாம் 
காவிரி பார்த்து .............