28.7.11

கடவுளின் பிரதி


போதுமென்று 
சொன்ன பிறகும் 
இன்னொரு இட்லி வைக்கும்
அம்மாவின் பரிமாறலிலும்

ண்டியில் பாத்து போப்பாவெனும்
அப்பாவின் குரலிலும் 

டிந்தபின் கசியும் 
மனைவியின் விழியோர நீரிலும்

தூக்கத்தில் சிரிக்கும் 
குழந்தையின் முகத்திலும் 

டவுளை பல ரூபங்களில் 
கண்டு கொண்டே இருக்கிறேன் ....... 

25.7.11

யதார்த்த கவிதைகள்



1.உறுத்தல் 
களைகட்டிய 
கல்யாணவீட்டில் 
சிரிக்க முடியாமல் 
வீடு வரும்வரை
உறுத்திக்கொண்டே 
இருந்தது 
பக்கத்து வீட்டில் 
கெஞ்சி வாங்கிய 
முறுக்கு சங்கிலி  


2.அடமானம் 
பிராவிடன்ட் பணம் 
பர்னிச்சர் சந்தா
நகை சீட்டு 
எவனிடமோ 
அடகு போக 
தயாராகிறது
பெண்ணுடன்  
பெண்ணை பெற்றவர்களின்
சேமிப்பும் 


3.மணற்குடுவை 
சமவயதுள்ள
வயோதிகர்களின் 
ஆபிச்சுவரி 
பார்க்கையில்
எங்கோ
உடலில் 
கவுன்ட் டவுன் 
கேட்கிறது 

4.ஓம் 
தெருவிழாக்களில் 
அசிலி பிசிலிகளின்
இரைச்சலில் 
மறைந்து கரைகிறது
ஓம்கார நாதம்



5.உயில் 
உயிலென்பது  
கொடும் பிள்ளைகளின் 
பேராசை மையினால் 
எழுதப்படும் 
மரண முன் அறிவிப்பு 
பத்திரம்




20.7.11

கலவித்தொகை 18 +++



தலைவி : கலவி ஐயம் களைக தலைவா !!!!!


தலைவன் : கலவிப்பரீட்சையில் உன் உடம்பெனும் 

கேள்வித்தாளில் என் உயிரெனும் பதிலை எழுதுவேன்


தலைவி : கூடா நாட்கள் ?


தலைவன் : முழுமதி நாளும் நிலவற்ற இரவும், 

சாண நீரில் கழுக்காணி  நிற்கும் தருணமும்


தலைவி : கூடும் நேரம் ?


தலைவன் : காலையும் பகலும் கையறு மாலையும்

ஊர்துஞ்சி யாமமும் விடியலுமென்றிப் 
பொழுதிடை தெரியிற் பொய்யே 
காமமென்கிறது குறுந்தொகை


தலைவி : கலவியின் முதற்படி

தலைவன் : முதற்படி முதல் கடை வரை 

சொல்கிறேன், கேளடி

அகநகைப்பாய் பேசியது  கடுநகையாய் மாற  

கரங்கள் தழுவி சிரமோர்ந்து
உச்சந்தலையில் முத்தமிடுவேன்
பொய்யாய் எனை விலக்கி
மெய்யுடன் அணைப்பாய்
இறுக்கி இதழில் முத்தமிட்டு 
நாவால் மேலண்ணம் துழாவி
காற்று புகா கவசமாவேன் 


மெல்லத் துகிலுரிந்து 
நகில் மீதுலவுவேன்
சிலீமுகம் உள்ளிழுத்து 

மகவுக்கு பால் சுரக்க 
ஆயத்தம் செய்வேன் 


உகிர்களால் குறியிட்டு 
பூரித்த கொங்கையில் 
பற்குறியிடுவேன்


உந்தியில் வட்டமிட்டு 
கடுவன் ரோம வயிற்றில் 
அதரத்தால் உலாவுவேன் 


கீழிறங்கி கிறங்கி 
புற்றரவு கடிதடம் பற்றி 
கந்து முனை சுவைத்து 
நாவால் அணைப்பேன் 
காமத்தீயினை 


உன்னுச்சம் முன்னென்பேன்
என்னுச்சம் பின்னென்பேன்


பிளந்த நிதம்பத்தில் 
லிங்கம் செலுத்தி 
இடைநிலை மெய்ம்மயக்கம் 
பெறுவோம் ....................................


 




17.7.11

சும்பி





இதழ்களென்பது.......


நரம்புகளை முறுக்கேற்றி 
காம சங்கீதமிசைக்கும்
அற்புத வாத்தியம்


ஒற்றி எடுக்க எடுக்க 
உலராத 
அதிசய சுரபி 


இடப்படுமிடத்தில்
தடங்கள் வேறானாலும் 
வேர்களசைக்கும்
வினோத விழுதுகள் 


சப்த மாத்திரைகளின் 
வேறுபட்ட ஒலிகளில் 
உயிர்க்கூடசையும் 
உன்மத்த வித்தை 

விழி செருகி 

தலை சாய 
பரிமாறும் முத்தங்கள்
குறிசேரா

சைவக்கலவி 


யாருக்கோ 
இடப்படாத 
முத்தமொன்று 
உறைந்தே கிடக்கிறது 
ஒவ்வொருவரின் 
உதடுகளிலும் ................

14.7.11

சாயும் நாற்காலி



98ல் வாங்கிய கணிணி
பரணில் தூங்க 
மடிக்கணினி 
அலங்கார மேசையில் 


நேஷனல் டேப் ரெகார்டர் 
ஒட்டடை படிய 
ஐ பாட் அலறுகிறது 


லேண்ட்லைன் ஒலித்து
பல நாளான பொழுதும் 
பிளாக்பெர்ரி அழைக்கிறது 


பழையதுகளை ஒதுக்கியே 
வாழ்கிறது இளையதுகள் 


ஈசி சேரில் அறையின் 
மூலையில் நான்
என்னை நிரப்புபவன் 
யாரோ ?