மையில் துளிர்க்கும்
ஒவ்வொரு எழுத்தும்
மனதணுக்களின் சாரம்
சிறுவயதில் பழகிய
அகர உகரங்கள்
சற்று கோணலாகவே இருந்தது
விடுமுறை விண்ணப்பங்கள்
மகிழ்வின் வடிவாகவே இருந்தது
தந்தைக்கு எழுதிய
கடிதங்களில்
எழுத்துகள் சற்று
குனிந்தே இருக்கும்
காதலிக்கு எழுத
ஆரம்பித்த போது
புள்ளிகளில் இதயம் தெரியும்
வேலைக்கு விண்ணப்பித்தபோது
பணிவாய் இடைவெளி
நிரப்பியது
குடும்ப பொறுப்பு
ஆனால்
அம்மா உனக்கெழுதும்போது
மட்டும்
எழுத்துகள் கலங்கி
கரைந்தே போகிறது ....................