தூரிகைத்தொட்டிலில்
தவம் கிடந்தது
வந்துதிக்கும்
வர்ண சிசுக்கள்
கோல் முனை மாறி
நக நுனியில் விழும்
வெண்திரை போர்த்திய
வீர்யவரி சிசுக்கள்
மகரக்கட்டுடைந்து
சப்தஸ்வர சப்தத்தில்
லயபேதமற்று
உட்கொல்லும்
இதய சிசுக்கள்
சதுர செம்மண்களில்
சாம்ராஜ்ய ஆசைகள்
கருங்கற்களில் குருதிக்கறையொழுக
காவிய சிசுக்கள்
சதையுளி செதுக்கிய
காமக்கூடத்தில்
பிளந்துதித்த
பெருஞ்சிற்ப சிசுக்கள்
ஆரஞ்சு சுளைகளுக்குள்
ஆப்பிள் சுவையும்
ஆதாம் ஏவாளின்
இடுப்பளவில் இரு சிசுக்களும்
25.5.10
19.5.10
காமம் + (மனிதக்)கடவுள்
பிரம்ம முஹுர்த்தத்தில்
பிரணாயாமம்
சூர்யோதயத்தில்
சூர்ய நமஸ்காரமும்
அக்னிஹோத்திரமும்
ஒருமணி நேரம்
மந்திரங்கள் ஜெபித்து
ஆலயம் சென்று
எதிர்வரிசை பெண்ணின்
விலகிய முந்தானையில்
மனம் விலகவில்லை
கடவுள் தோற்று
காமம் ஜெயிக்கிறது
(அன்பு தோழி கலாவின் கையால் தலையில் குட்டு வாங்கியதால் தலைப்பு மாற்றம்)
9.5.10
இயலும் அயலும்
சுக்கில சுரோணித
ஸ்தம்பிக்கும் பரியங்கம்
லிங்கநீட்சியின் நீட்டிப்பில்
திரவ லிக்னோகைன்
மூலாதாரம் முழிக்க
அகம் பிரம்மாஸ்மி
மரித்த பாம்பினனுக்கு
கார்ப்பரேட் காவிகள்
உச்சத்தின் எச்சத்தில்
உயிர்க்கும் சூல்கள்
இரவல் உயிரணு
இயந்திர கருப்பை
கருக்கல் வெளிர்க்கும்
பஞ்சவடி விருட்சங்கள்
சனங்களீர்க்கும்
ஜவுளிகடை பைபர்ஆப்டிக் மரங்கள்
பஞ்சகவ்யமும் துழாய்தீர்த்தமும்
பிரசாத மருந்தாக
இறைவனடி சேர்க்கும்
காலாவதி மருந்துகள்
சுற்றும் புவியின்
சுழற்சியில் சூடு
மானாவாரி வயலால்
அடுப்புறங்கும் வீடு
செயற்கை மானுடத்தால்
இயற்கையழிக்கும்
உலகையொருநாள்.....................
2.5.10
ஹேமா, தேனக்கா மற்றும் பலர் - 50வது பதிவு
எட்டு மதங்களுக்கு முன் Monotonous lifeல் Freezeஆகி நின்றபோது திடீரென்று கண்ணில் பட்டது வலையுலகம். நாமும் கவிதை எழுதி பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதே எழுதிப்பார்ப்போம் என்று எழுத ஆரம்பித்தேன்.
முதல் ஊக்குவிப்பாக ஹேமாவின் பின்னூட்டம் என்னை அங்கீகரித்தது. தொடர்ந்து எழுதினால் உங்கள் எழுத்தும் மிளிரும் என்று ஹேமாவின் அறிவுரை, இன்று நானும் ஒரு வலைபதிவராக ஆகமுடிந்து ஐம்பதாவது பதிவு போடமுடிகிறதென்றால் முதல் காரணம் ஹேமாதான்.
அதன்பின் தேனக்காவின் பாராட்டு, சின்ன சின்ன வரிகளில் அற்புதமாக எழுதுகிறீர்கள் என்று. மிக பெரிய அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சி என்னுள். என் சகோதரியாக அவ்வப்போது எனை வழிநடத்துவதில் முதல் நபராக இருப்பது தேனக்காதான்.
குறையுள்ள கவிதைகளை கூட விவரித்து நிறைவுற்ற பிறையாக மாற்ற முனையும் நண்பர் நேசமித்திரன்.
யதார்த்தத்தின் மறுபெயராய் நான் கோவித்தால் கூட சிறு குழந்தைக்கு நிலவு காட்டுவது போல் என் மனதிருக்குள் நுழையும் பா.ரா.
வலிய வந்து பாராட்டி மகிழும் அன்புச்சகோதரி தமிழரசி
பின்னூட்டத்தை கூட கவிதையாய் பொழியும் அன்பு நண்பர் சந்தானசங்கர்
எனக்கு முதன் முதல் விருது தந்த எனதருமை தம்பி புலவன் புலிகேசி
இரண்டாவது விருது தந்து எனை அன்பு சகோதரனாய் பாவிக்கும் மலிக்கா
எனது அகசூல் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து உதவிய ஜீவன்
வலைச்சரத்தில் எனது கவிதை தளத்தை அறிமுகம் செய்த சகோதரி இயற்கை,
அ.மு.செய்யது, வானம்பாடிகள்,அக்பர்
தொடர்ந்து ஊக்குவிக்கும் ஜோதிட ஓஷோ சித்தூர்.முருகேசன்
தொடர்ந்து வாசித்து வாழ்த்தும் ராமலக்ஷ்மி அக்கா
ரசித்து வாழ்த்தும் எங்கள் ஸ்ரீராம்
வித்தியாச கவிதைகளால் வியக்கவைக்கும் சிவாஜி சங்கர்
எப்பொழுதும் வாழ்த்தும் பாலா
வாழ்த்தியே கலாய்க்கும் அன்பு நண்பன் சத்ரியன்
தவறாமல் வாழ்த்தும் நண்பர் கருணாகரசு
பின்னூட்ட புயலாக அறியப்படும் ஜெகநாதன்
பின்னூட்ட சுனாமியாக அறியப்படும் கலா
வாய்ப்பு தந்திருப்பேன் என்று சொன்ன இயக்குனர் செல்வக்குமார்
ஆரம்பத்தில் தொடர்ந்து ஆதரவு தந்து வாழ்த்திய ரசிகை
கவிநண்பன் கமலேஷ்
எங்க ஊர் புபட்டியன்
மனது நிரம்பி வாழ்த்தும் பலா பட்டறை ஷங்கர்
அன்புச்சகோதரி ஜலீலாக்கா
அன்புச்சகோதரி காயத்ரி
மற்றும்
கலகலப்ரியா, காரூரன், வாணிநாதன், ஜெரி ஈசானந்தா, பின்னோக்கி, நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார், ஊடகன், கவிக்கிழவன், விக்னேஷ்வரி, வேல்ஜி
உழவன், க.பாலாசி, ராஜலக்ஷ்மி பக்கிரிசாமி, சந்ரு, தியாவின் பேனா
பாலா கவிதைகள், யாத்ரா, முகமூடியணிந்த பேனா, S.A. நவாஸுதீன்
பிரியமுடன்...வசந்த், பூங்குன்றன்.வே, விதூஷ், ரிஷபன், சிங்கக்குட்டி
சுந்தரா, ஆ.ஞானசேகரன், பத்மா, அண்ணாமலை�@����<��nE0��், ஆர்.கே.சதீஷ்குமார்
மதுரை சரவணன், பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி, ♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫
பிரியா, ரோஸ்விக்,யாதவன், திவ்யாஹரி, அஹமது இர்ஷாத், சக்தி
People call me "Paul"..., மோனி, +யோகி+, சிவன், சுதாகர் குமார் LK
திருஷ், ஸ்டார்ஜன், ஜில்தண்ணி, பவி, nige k,பித்தனின் வாக்கு, மன்னார் அமுதன்,
றமேஸ், தமிழினிமை..., செந்தில் நாதன், விழியில் விழுந்தவன்
தேவன் மாயம், விவேக் நாராயண், Jayaprakash Sundarraj, zoooo, Lee
இவர்களுக்கு எல்லாம் நன்றி என்று ஒற்றை வார்த்தையை மட்டும் எப்படி காணிக்கை ஆக்குவது என்று தெரியவில்லை.
என்ன கைம்மாறு இவர்களுக்கு செய்யபோகிறேன் எனது கவிதைகளை படிக்கும் தண்டனை தருவது தவிர !!!!!!
Subscribe to:
Posts (Atom)