இறைக்கப்பட்ட அரிசிக்கு
சுரைக்காய் விதை தெளித்த
தவக்கட்டான் குருவி
வீதியில் கொட்டிய
பழைய சோற்றுக்கு
நாள் முழுதும் காவல்
காக்கும் தெருநாய்
பிண்ட உணவுக்கு
ஆத்மா விசாரம்
செய்யும் காகம்
மண்ணை அகழ்ந்து
மட்குரமாக்கும்
மண்புழு
இன்று காலை செய்த
உதவியை
மதியமே மறக்கும்
ஆறறறிவு மத்தியில்
ஐந்தறிவினங்கள்
செஞ்சோற்று கடனை
எப்பொழுதும்
மறப்பதே இல்லை ...............