11.5.14

யாய்



அன்பு சமைத்து 

ஆசி பெருக்கி 

இதயம் பிழிந்து 

ஈரம் சொரிந்து 

உயிர் வருத்தி 

ஊண் அளித்து

எளிமை பழகி 

ஏசுதல் அற்று 

ஐயம் களைந்து

ஒற்றுமை விதைத்து 

ஓதுதல் உரைத்து 

ஒளடதம் தந்து 

எஃகென காப்பவளே 

அன்னை ...................................

கண்ணீரால் கால்கழுவி 
வணங்குவோம் ................ 

7.5.14

சாரல்


கார்மேகம் 
நிறைசூலுடன்
செஞ்சாமாருதம் வீச 
வருணன் 
பூமியை 
துலக்கிக்கொண்டு 
இருக்கிறான் ................