2.11.09

இயற்கையின் நியதி



ஒடிசல் தேகத்தில்
பச்சை ரோமங்கள்


அரசுபயச்சேலையில்
முக்கோண  தூளி


சகதியில் வேர்வைத்து
குருதியாய் புகட்டிய


பாலுரைந்த உதட்டின்
மிச்சத்தில் ஈக்கள்


இடைப்புல் கழித்து கிழாரின்
கரமழுத்திய கரும்பணக்காமம் 

விசும்பி வீலென்ற அரவம்
மிச்சப்பாலும் மாரில் வற்றியிருந்தது 

26 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை விஜய்.

புலவன் புலிகேசி said...

//சகதியில் வேர்வைத்து
குருதியாய் புகட்டிய


பாலுரைந்த உதட்டின்
மிச்சத்தில் ஈக்கள்//

அழகு விஜய்....அருமையான வரிகள்.....

கவி அழகன் said...

உங்கள் கவிதையை வாசித்து மண்டையை கசக்கி ஜோசிகும் போது எனக்கு ஒரு கவிதை பிறக்கிறது நன்றி கவிதையின் பிறபிடமே

விஜய் said...

ராமலக்ஷ்மி said...

தங்கள் தொடர் வருகையும் வாழ்த்தும் என்னை மேன்மேலும் வளரச்செய்யும்

மிகுந்த நன்றி

விஜய்

விஜய் said...

@ புலவன் புலிகேசி

மிக்க நன்றி நண்பா

தொடர்பதிவு மறந்துடாதீங்க

விஜய்

விஜய் said...

@ கவிகிழவன்

மிக நன்றி தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும்

சீக்கிரம் எழுதுங்க பார்க்கிறேன்

விஜய்

Thenammai Lakshmanan said...

விஜய் அருமையாய் உள்ளது

கண்முன் ...
உங்கள் கவிதைகள் அனைத்துமே ..

உண்மையின் அதிரடி வெளிப்பாடு..

விஜய் said...

உங்களின் ஊக்கம் இல்லையெனில் எனது கவிதைகள் அரிச்சுவடியிலே நின்று போயிருக்கும்.

மிகுந்த நன்றி சகோதரி

விஜய்

சத்ரியன் said...

//அரசுபயச்சேலையில்
முக்கோண தூளி//

விஜய்,

இந்த வரிக்கு உகந்த படம் இணைத்திருந்தால்...கவிதை இன்னும் கனத்திருக்கும்.

கவிதை நம்மைப் போன்றோருக்கு மட்டுமாப் புரியும்?...ஏழைகள் இப்படியிருக்கையில் நம் மக்கள் பிரதி" நிதி"கள் "..யிர்" பிடுங்கிக் கொண்டிருப்பார்களா?

சிவாஜி சங்கர் said...

//அரசுபயச்சேலையில்
முக்கோண தூளி//

நல்லா இருக்குதுங்க சார்..

விஜய் said...

நன்றி சத்ரியன்

அவசரத்தில் சரியான படம் கிடைக்கவில்லை

தாங்கள் சொல்வது நிதர்சனம்தான்

விஜய்

விஜய் said...

நன்றி சிவாஜி சங்கர்

தங்களது முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

விஜய்

அன்புடன் நான் said...

நல்லாயிருக்கு விஜய் ( புரிந்துக் கொள்ள‌ சிரமப்பட்டேன்)

விஜய் said...

நன்றி அரசு

சிரமப்படுத்தியதிற்கு மன்னிக்கவும்

விஜய்

சந்தான சங்கர் said...

இளம் பயிருக்கும்
இளம் தளிருக்கும்
களம் ஒன்றாய்
காட்சி இரண்டாய்

அருமை விஜய்.

ஹேமா said...

வேணும் வேணும் நான் இப்பிடி எழுதினா விஜய் ம் இப்பிடிதான் எழுதுவார்.நல்ல மண்டையைப் போட்டுப் பிய்ச்சுக்கோ ஹேமா.
உனக்கு வேணும் வேணும்.இப்பிடிப் புலம்ப விட்ட்டுடாரே விஜய்.

பாதிப் பால் குடிச்சுப் போறேன்.மிச்சம் குடிக்கட்டும் அரவமென.

விஜய் said...

சங்கர் வேலை பளு அதிகமோ?

மிக்க நன்றி சங்கர்

விஜய்

விஜய் said...

ஹேமா அடுத்த நிலைக்கு சென்று விட்ட நீங்கள் இப்படி புலம்பலாமா ?

நானே மண்டைய பிச்சிட்டு அலையிறேன் உங்க கவிதையை படிச்சிட்டு

இன்னும் புரியலை

மற்றபடி என் முதல் சகோதரி அல்லவா

உளம் மிகுந்த நன்றி

விஜய்

Music Composer Vivek Narayan said...

I saw ur coment in my blog.yes ur correct. I couldnot recognize u pls. tell ne how do u know me.

ur kavidhai is good.

விஜய் said...

Thank u sir visiting my blog and thanks for ur comments.

selva seen my athichoodi and gave comments. then i visited his blog and found that u r the music director. u have written in your blog visweswaraya namaha so that i came to conclusion.

best wishes for your film.

i am also a guitarist.

Vijay

புலவன் புலிகேசி said...

நண்பரே தொடர்பதிவு எழுதி விட்டேன். வந்து பாருங்கள்.

பா.ராஜாராம் said...

உங்களுக்கு ஒரு தொடர் அழைப்பு இருக்கு மக்கா..நம் தளத்தில்!

பா.ராஜாராம் said...

விஜய்...உயரமாகி கொண்டே இருக்கிறீர்கள்!வாழ்துக்கள்!

விஜய் said...

வருகைக்கும் ஆசிக்கும் நன்றி மக்கா

கடைசியிலே என்னை மாட்டி விட்டுடீங்களே

தெரிஞ்ச அளவுக்கு எழுதறேன்

தங்கள் அன்புக்கு நான் அடிமை

விஜய்

அன்புடன் மலிக்கா said...

அழகான அமைதியான வரிகள் சகோதரரே...

விஜய் said...

நன்றி சகோதரி

எனது பழைய பதிவுகளையும் படித்ததுக்கு

விஜய்