17.3.11
ஒருமுறை
ஒருமுறை பார்
என் கருவிழிதனில்
நட்சத்திரம் அறி
ஒரு சொல் பகர்
உன் பெயருக்கெழுதும்
என் உயிரின் உயிலை வாசி
ஒருமுறை சிரி
என் சிரசின் பின்
ஒளிவட்டம் காண்
ஒருமுறை அணை
எழும்பு மஜ்ஜையில்
புது அணுக்களின்
உற்பத்தி உணர்
ஒருமுறை முத்தமிடு
உயிர் பூக்கும்
உன்னத ஓசை கேள்
ஒருமுறை திற
இதயக்கதவினுள்
நுழைந்து மூடி
மறைந்தே வாழ்வேன் ...........................
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)