26.3.10

அச்சச்சுவை




நிசப்த பின்னிரவின்
சூன்ய சுழிநிலை

கிளை முறிக்கும்
நெட்டிகள் பைசாசமாய் 

சில்வண்டின் சிணுங்கலொடுக்கும் 
ஆந்தையின் துணையறியுமலறல்

வெண்புகை மேகரூபம் 
நிறம் பிரித்தரியா நாயின் ஓலம்

செவிபுகவில்லை எதுவும் 
தன்னை மாய்க்கமுனைந்த 
ஒருவனுக்கு............



42 comments:

மதுரை சரவணன் said...

அருமை. வாழ்த்துக்கள்

Paleo God said...

தலைப்பு பொருத்தம் ..:))

Anonymous said...

ரொம்ப நாளைக்கு பிறகு எழுதியிருக்கீங்க விஜய்..கவிதை புரியுது ஆனால் புரியலை...

ஸ்ரீராம். said...

தற்கொலை முயற்சி பற்றி கவிதையா விஜய்? பின்னணி வர்ணனைகள் நன்றாய் இருக்கின்றன...இன்னும் சொல்ல எதுவோ இருப்பது போல....கவிதை முடியவில்லை இன்னும்.....

விஜய் said...

@ மதுரை சரவணன்

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ நேசன்

நிரம்ப நாட்களுக்கு பிறகு வந்தாலும் புன்னகையை நிரப்பியதற்க்கு நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஷங்கர்

நன்றி நண்பா

நீங்க சூப்பர் பாஸ்ட் பதிவர் ஆயிற்றே

உங்க பதிவு வேகத்தை சற்று குறைத்தால் தேவலை

விஜய்

விஜய் said...

@ தமிழ்

நன்றி சகோதரி.

தற்கொலை பற்றியது தான் பெரிதாக ஒன்றும் இல்லை.

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றி நண்பா

முடியாதது போலத்தான் எனக்கும் தெரிகிறது

விஜய்

ராமலக்ஷ்மி said...

தலைப்பு பொருத்தம்.

கடைசி வரிகளில் வந்தது வருத்தம்.

அருமை.

விஜய் said...

@ ராமலக்ஷ்மி

தங்களது வாழ்த்துக்கு மிகுந்த நன்றி சகோதரி

விஜய்

புலவன் புலிகேசி said...

நிஜம்...அச்சச்சுவை

அன்புடன் மலிக்கா said...

கவிதையின் அர்த்தங்கள் மனசுக்குள் கேட்குது
அருமை..

விஜய் said...

@ புலவன் புலிகேசி

மிகுந்த நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ மலிக்கா

நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி

விஜய்

திவ்யாஹரி said...

//செவிபுகவில்லை எதுவும்
தன்னை மாய்க்கமுனைந்த
ஒருவனுக்கு............//

ரொம்ப நல்லா இருக்கு விஜய்..

விஜய் said...

@ திவ்யாஹரி

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி சகோதரி

விஜய்

பனித்துளி சங்கர் said...

அருமையான சிந்தனை !
வாழ்த்துக்கள் .

விஜய் said...

@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .

தங்களின் ஊக்கத்திற்கு மிகுந்த நன்றி நண்பா

விஜய்

Kala said...

வாழ்க்கையே இருண்டு ......
தற்கொலை செய்யப் போகும் போது
கண், செவி கூட வேலைசெய்யாது
{உணர்வின்றி...அந்த ஒரு நோக்கம்
தான் குறி}
விஜய்.
நல்ல வரிகள் நன்றி

விஜய் said...

@ கலா

அருமையான விளக்கம்

வாழ்த்துக்கு நன்றி சகோதரி

விஜய்

Priya said...

தலைப்பும் கவிதையும் அழகு!

விஜய் said...

@ ப்ரியா

தங்களின் முதல் வரவு நல்வரவாகுக

நெஞ்சார்ந்த நன்றி சகோதரி

விஜய்

Ahamed irshad said...

கவிதை நல்லாருக்கு. வாழ்த்துக்கள் விஜய்....

விஜய் said...

@ அஹமது இர்ஷாத்

அஸ்ஸலாமு அலைக்கும்

தங்களது முதல் வருகை நல்வரவாகுக

நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா

விஜய்

பனித்துளி சங்கர் said...

மீண்டும் , மீண்டும் வரத்தூண்டுகிறது . தொடர்ந்து பதிவிடுங்கள் .

விஜய் said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

மன்னிக்க வேண்டும் நண்பா

அலுவல்கள் காரணமாக பதிவிட முடியவில்லை.

கண்டிப்பாக எழுதுகிறேன்

விஜய்

Sakthi said...

/வெண்புகை மேகரூபம்
நிறம் பிரித்தரியா நாயின் ஓலம்/
arputham....

விஜய் said...

@ சக்தி

நம்மூர்க்காரரா, மிகுந்த நன்றி

அடிக்கடி வாங்க சக்தி

விஜய்

Thenammai Lakshmanan said...

வெண்புகை மேகரூபம்
நிறம் பிரித்தரியா நாயின் ஓலம்//

இது ரொம்ப அருமை விஜய் எப்படி கொண்டு வந்தீங்க இந்த நிகழ்வை கவிதை வரிகளில் அருமை

prassanna said...

hai pangu really very nice

விஜய் said...

@ தேனக்கா

நன்றி அக்கா

விஜய்

விஜய் said...

@ Prassanna

Hai pangaali

how is life there

take care & Thanks

Vijay

சத்ரியன் said...

விஜய்,

உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வு கூட தன்னை மறந்த நிலை தானோ?

விஜய் said...

@ சத்ரியன்

ஆமாம் நண்பா

நன்றி

விஜய்

ஹேமா said...

வந்திட்டேன் விஜய்.எல்லோரினதும் விடுபட்ட கவிதைகள் ரசிக்க இனி நிறைவான நேரங்கள் ஒதுக்கவேணும் !
தொடர்வோம் சந்திப்போம்.

விஜய் said...

@ ஹேமா

வாங்க ஹேமா

உங்கள் வரவு நல்வரவாகுக

விஜய்

Paul said...

மிக அருமை.. கவிதையை முடித்த விதம் தூக்கல்..

விஜய் said...

@ Paul

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

நம்மூரா?

விஜய்

சிவாஜி சங்கர் said...

வணக்கம் அண்ணா... நலமா..?
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

மிகுந்த நலம் தம்பி

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

விஜய்

விஜய் said...

நன்றி bogy.in

விஜய்