1.3.14

கையறு நிலை



மிராஸ்தாராக  இருந்து நொடித்து 
மளிகைக்கடையில் கணக்கு எழுதுபவர்கள் 

கடைவீதியில் கைக்குழந்தையோடு 
காதலியை கண்டவர்கள் 

நெருங்கியவர்களின் மரண நொடியில் 
கைபிடித்தவர்கள் 

உயிராக எண்ணிய நண்பனின் 
துரோகத்தை தாங்கியவர்கள் 

வாரக்கடைசியில் வெறும் பாக்கெட்டுடன் 
மகளுக்கு கிண்டர்ஜாய் வாங்க இயலாதவர்கள் 

உலகமென எண்ணிய மகள் காதலால் 
ஓடியதால் உளம் நொந்தவர்கள் 

மேற்கண்ட ஏதாவது ஒன்றில் 
நீங்கள் இருந்தால் 

நீங்கள் எல்லாம் 
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ..........................

2 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு...

திண்டுக்கல் தனபாலன் said...

சொன்ன விதம் அருமை... இன்னும் நிறைய இருக்கு...!