18.7.14


என்னவளே 
**************

ஒற்றை பார்வையில் 
நானெனும் 
அகந்தை அழிந்ததடி 

ஒற்றை வார்த்தையில் 
செவிகள் 
சொர்க்கம் கண்டதடி 

ஒற்றை மூக்குத்தி 
மின்னலில் 
காவியம் பேசுதடி 

ஒற்றை விரல் ஸ்பரிசத்தில்
மூலாதாரம் 
முளைத்து  விழித்ததடி  

ஒற்றை முத்தத்தில் 
கண்மூடி 
காற்றில் கரைந்தேனடி 

ஒற்றை பூவாய் 
நீ வருகையில் 
பூந்தோட்டம் 
உன்னை தொடருமடி

ஒற்றை "ழ" கரமாய் 
நீ பேச 
தமிழ் 
உன்னை சுமக்குமடி ................................