8.8.14

பெயரற்றவள்



ஞாபக ஒட்டடைகளை 
சற்றே விலக்கிப் பார்த்தால் 
நீ மட்டுமே தெரிகிறாய் 

கருவிழிக்குள் நூறு 
கவிதைக்கான கரு 

நாசிக்கை எழுதி வாங்கும் 
நாசி 

ரோஜாவின் உதிரமொத்த 
அதரம் 

கருப்பையொத்த காதுகளில் 
ஜிமிக்கி குழந்தைகள் 

திருஷ்டி போட்டு 
வைக்கும் கன்னக்குழி 

வெண்பஞ்சு பாதம் தாங்கும் 
முத்துக்கொலுசு 

ஓரக்கண்ணால் பார்த்து 
இதழோரம் புன்முறுவாய் 

பெண்மையின் துல்லிய 
சுகந்தத்துடன் எனைக் கடப்பாய் 

ஆறு பௌர்ணமிகளில் 
தொலைந்த நிலவே 

எங்கு இருக்கிறதோ 
உன் வானம்.........................


4 comments:

ரிஷபன் said...

அழகு மிளிர்கிறது

விஜய் said...

Nandri Nanbaa

வெங்கட் நாகராஜ் said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

http://blogintamil.blogspot.in/2014/11/blog-post_12.html

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரத்தில் தங்களது பதிவினைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.