மதவாதிகள்
அறிவு சீப்பை ஒளித்து
சிந்தனையற்ற சிகைதனில் சிடுக்கெடுப்பீர்
மருத்துவர்
வைரல் சுரத்திற்கு
ஆண்ட்டிபயாடிக் அளிப்பீர்
அரசியல்வாதிகள்
எங்கள் வாக்கில் பற்றுவைத்து
உங்கள வங்கிக்கணக்கில் வரவு வைப்பீர்
அறிவியல்வாதிகள்
அண்டம் பிளக்குமறிவால்
பிண்டம் பிடிக்க முயல்வீர்
முதலாளிகள்
குளிர்வறையிலிருந்து
ஏழையின் வியர்வையை
எத்தனை லிட்டரென
அளந்து பார்ப்பீர்
சுயநலவாதிகள்
எரிக்கப்பட்ட எலும்புச்சாம்பலில்
சலித்து தங்கம் தேடுவீர்
ஒருநாளேனும்
புனிதராயல்ல
மனிதராவேனும்
மாறிப்பாருங்கள்.......
41 comments:
காலத்திற்கேற்ற கவிதை..
நல்லாருக்கு..!!
வாழ்த்துக்கள் அண்ணா.........
நியாயமான ஆசைகளுடன்... விஜயின் ஆக்கக் கவிதை.
நல்லாயிருக்கு.
June 12, 2010 9:40 AM
Blogger சத்ரியன் said...
நியாயமான ஆசைகளுடன்... விஜயின் ஆக்கக் கவிதை.
unmai thaan analum periya aasai.....
நியாயமான உணர்வுகளோடு கவிதை
பிரதிபளிக்கிறது..
@ சிவாஜி சங்கர்
நன்றி தம்பி
விஜய்
@ சத்ரியன்
நன்றி நண்பா
விஜய்
@ தமிழ்
வாங்க சகோதரி
ரொம்ப நாளாச்சு பார்த்து
பெரிய ஆசைதான் என்ன செய்ய
நன்றி
விஜய்
@ மலிக்கா
வாங்க சகோதரி
உங்க விருத மாட்டிட்டேன்
நன்றி
விஜய்
ஆசையில்லாத உயிர்களே இல்லை.அது அடுத்தவர்களைப் பாதிக்காமல் வேதனைப்படுத்தாமல் இருந்துவிட்டாலே போதும் விஜய்.
//ஒருநாளேனும்
புனிதராயல்ல
மனிதராவேனும்
மாறிப்பாருங்கள்//
அருமை விஜய். நல்ல கவிதை.
@ ஹேமா
அது உண்மைதான்
நன்றி
விஜய்
@ ராமலக்ஷ்மி
நெஞ்சார்ந்த நன்றி சகோதரி
விஜய்
நல்லாருக்கு விஜய்!
அறிவியல்வாதிகள்
அண்டம் பிளக்குமறிவால்
பிண்டம் பிடிக்க முயல்வீர்//
அட அற்புதம் விஜய்.. ரொம்ப நாளாச்சு நான் உங்க பக்கம் வந்து.. மன்னித்துக் கொள்க விஜய்..:
அறிவியல்வாதிகள்
அண்டம் பிளக்குமறிவால்
பிண்டம் பிடிக்க முயல்வீர்//
அட அற்புதம் விஜய்.. ரொம்ப நாளாச்சு நான் உங்க பக்கம் வந்து.. மன்னித்துக் கொள்க விஜய்..:
@ நேசன்
நன்றி நண்பா
விஜய்
@ தேனக்கா
நமக்குள் எதற்கு மன்னிப்பெல்லாம்
நீங்கள் புது உயரம் தொட தொட இங்கு உங்கள் தம்பியின் உள்ளம் மகிழும்
நன்றி அக்கா
விஜய்
அன்பு விஜய்...
எளிமையான வார்த்தைகளில்
ஆழமான அலசல்கள் ...
பல முறை படித்து சுவைத்தேன் ...
மனிதர்கள் புவியில் பெருகட்டும் ...
வருகிறேன் தோழர் ...
கவிதை மிக கம்பீரம்.
வாழ்த்துக்கள்.
ஒருநாளேனும்
புனிதராயல்ல
மனிதராவேனும்
மாறிப்பாருங்கள்.......
என்ன அற்புதமான வரிகள்
நல்லாயிருக்கு விஜய்
இது எனது முதல் வருகை
உங்கள் தலத்திற்க்கு
இவன் உங்கள் தோழன்
செந்தில்குமார்.அ.வெ
@ நியோ
தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி நண்பா
விஜய்
@ அரசு
நெஞ்சார்ந்த நன்றி நண்பா
விஜய்
@ செந்தில்குமார்
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் ஓட்டுக்கும் மனதார்ந்த நன்றி நண்பா
அடிக்கடி வருக
உடல்நலம் எவ்வாறு உள்ளது?
விஜய்
சார் - நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
http://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!
fine nna
///சுயநலவாதிகள்
எரிக்கப்பட்ட எலும்புச்சாம்பலில்
சலித்து தங்கம் தேடுவீர்
.////////////
புதுமைதான் வார்த்தைகளும் ,சிந்தனையும் . பகிர்வுக்கு நன்றி .
@ பாலா
நன்றி பாலா
விஜய்
@ ஷங்கர்
நன்றி நண்பா
விஜய்
கவிஞன்யா வாழ்த்துக்கள்
நல்ல கருத்துள்ள கவிதை நண்பரே...
@ சதீஷ் குமார்
நன்றி நண்பா
விஜய்
@ கமலேஷ்
வைரமுத்து பற்றிய போன கவிதை பார்க்கவில்லையா நண்பா ?
நன்றி
விஜய்
சாட்டையால் அடித்திருக்கிறீர்கள்
அடிபடுபவர்களுக்கு
வலிக்குமா விஜய்?
காலம்தான் பதில் சொல்லவேண்டும்
நன்றி
கடைசி வரிகளில் ஏக்கமும், கோபமும் சேர்ந்து....நல்ல கவிதை விஜய்...
@ கலா
நெஞ்சார்ந்த நன்றி
விஜய்
@ ஸ்ரீராம்
நன்றி நண்பா
விஜய்
நல்லாருக்கு விஜய் என்ற விஜயகாந்த்! :-)
பங்கு,
உங்கள் மின் முகவரி கிடைக்குமா?
rajaram.b.krishnan@gmail.com
@ பங்கு
உங்க குசும்புக்கு அளவே இல்லையா ?
alphapegasir@gmail.com
omvijay007@gmail.com
விஜய்
தங்களுக்கு நான் அன்பின் வடிவாக விருது ஒன்றினை கொடுத்திருக்கிறேன்... நீங்கள் விருதினை பெற்றுக்கொண்டால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2010/06/blog-post.html
@ பிரபாகரன்
தம்பி
என்ன கைம்மாறு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை, நன்றி என்று சொல்வது தவிர
(விருது மாட்டிவிட்டேன்)
விஜய்
Post a Comment