20.6.10

வரங்கள்





சூரியக்கதவு திறந்தபின்னும் 
துய்க்கும் தூக்கம் 


நிலவயர்ந்த நிசியிலும் 
நீளும் விழிப்பு 


சித்திரை மாதத்தில்
பத்தரை செமீ மழை 


பூசணிப்பூ மாத
ஓசோன் காலை 


புலன் நடுங்கும் 
பனிப்புல்லமர்ந்து
பச்சை தேநீர் 


முனகாத கழிவறை 


முந்தாத உச்சம் 


சில்டனபில் தேடாத பள்ளியறை 


தமிழன் சாகாத துப்பாக்கி 


சிலிக்கான் திருடும் 
எஸ்கவேட்டர் மூழ்குமளவு 
பொன்னி வெள்ளம்


கூட்டமில்லா கோவில் 


சுணங்காத புரோஸ்டேட்


கோலிலா முதுமை 


தோற்கும் காதல் 


நரைக்காத காமம் 


கனவிலாவது 
கடனில்லா வாழ்க்கை 


மறுகன்னம் காட்டும் நட்பு 


உயிர் உறையுமிசை 


கருமண் காடும் 
திமிலுள்ள பசுவும் 

23 comments:

பனித்துளி சங்கர் said...

வாழ்வில் நித்தம் ஏங்கும் அனைத்தும் வேண்டி ஒரு கவிதை . அருமை . பகிர்வுக்கு நன்றி

நேசமித்ரன் said...

நேர்மையான விமர்சனம் சொல்லனும்னா வைர முத்துவ விட்டு வெளியே வாங்க விஜய்

அதே ஃபார்மேட் .தண்ணீர் தேசம் :(

பாராட்டிதான் ஆகனும்னா

சூப்பர் !!!!

ஹேமா said...

அத்தனை வரமும் கிடைக்க வாழ்த்துகள் விஜய்.

செந்தில்குமார் said...

ஏக்கங்கள்
ஏணிப்படிகளாய்
வரிகளில்....
வரம்கிடைக்க வாழ்த்துக்கள் விஜய்

Kala said...

சூரியக்கதவு திறந்தபின்னும்
துய்க்கும் தூக்கம் \\\\\\\\\

இந்த வரம் உங்களுக்கும்,ஹேமாவுக்கும்
கிடைக்க விடமாட்டேன்
சூரியன் உதிக்கும் முன்னாடியே
எழுந்திருக்க வேண்டும்
என்ன புரிகிறதா?
இல்லாவிட்டால்....

சில வரங்கள் நாம் நினைத்தால்
கிடைக்கும்
சில வரங்கள் நாம் நினைத்தாலும்
கிடைக்காது.

வரம் கேட்டு வடித்தவை
வடி தட்டின் மேலேயும்..
கீழேயும் விஜய்!
என்ன புரிகின்றதா?

விஜய் said...

@ ஷங்கர்

வாழ்த்துக்கு நன்றி ஷங்கர்

விஜய்

விஜய் said...

@ நேசன்

நிஜமாகவே தண்ணீர் தேசம் படித்ததில்லை நண்பா

மாற்றிகொள்கிறேன்

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஹேமா

நன்றி ஹேமா

விஜய்

விஜய் said...

@ செந்தில்குமார்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ கலா

சாபத்திற்கு நன்றி

விஜய்

தமிழ் அமுதன் said...

அருமை..!

கமலேஷ் said...

ம்ம்...ரொம்ப அழகான அழுத்தமான வரிகள் அண்ணா...
கடைசி உயிர் உறையும் இசை ரொம்ப நல்லா இருக்கு...
உறையும்/ உரையும் இங்க எழுத்து பிழை ஏதாவது இருக்கான்னா..

நேசமித்தரன் அண்ணன் சொன்னது போல
இது தண்ணீர் தேசம் பாணி மாதிரி எனக்கு தெரியலை..
ஆனால் வைரமுத்துவோட "வேண்டுவன" என்னும் ஒரு கவிதை
இதே கான்செப்ட் பிளஸ் இதே ஸ்டைலில் உண்டு...

அதிலும் அவர் உங்களின் கவிதையை போலவே

/// கடைசி வரை சுயமாய்
சிறு நீர் கழிக்கும் சுகம்.
உறக்கத்தில் உயிர் பிரியும் வரம் ///

என்று முடித்திருப்பார்.
ஆனா உங்க கவிதை உரையாடல் பாணி எதுவும் இல்லாமலே ரொம்ப விதியாசமா நல்லா இருக்கு...
வாழ்த்துக்கள் தொடருங்கள்...

விஜய் said...

@ ஜீவன்

நன்றி நண்பா

உங்க பதிவுகளில் பின்னூட்டம் போடா முடியவில்லை. சரி செய்யவும்

விஜய்

விஜய் said...

@ கமலேஷ்

உறையுமிசைதான், தவறை திருத்திவிட்டேன்.

தம்பியின் மனம் திறந்த பாராட்டுக்கு மனதார்ந்த நன்றி

விஜய்

ஸ்ரீராம். said...

எல்லோருமே ஏங்கும் ஆசைகள்....!

ஜில்தண்ணி said...

வரங்கள் ம்ம்ம் அருமை தலைவரே

சிவாஜி சங்கர் said...

கோர்வையான வார்த்தைகள்.,
வரம் கிடைக்க வாழ்த்துக்கள் அண்ணா.

Ahamed irshad said...

வாவ் சூப்பர் கவிதை அசத்திட்டீங்க....

Ahamed irshad said...
This comment has been removed by the author.
விஜய் said...

@ ஸ்ரீராம்

ஆமாம் நண்பா

நன்றி

விஜய்

விஜய் said...

@ அஹமது இர்ஷாத்

மிக்க நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ ஜில்தண்ணி

சும்மா ஜில்லுனு இருந்தது தம்பியின் பாராட்டு

விஜய்

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

எனதருமை தம்பி நலமா ?

நன்றி

விஜய்