23.6.11

தனித்திரு



கவிதைஎழுத 
கருப்பொருள் தேடினேன் 

உருவாக்கிய எந்தை

கருவாக்கிய யாய்

திருவாகிய இறை   

தருவுறை வன்னி 

கிட்டவில்லையெதுவும்

உன் மணவாழ்விற்கு   
எருவாகிய எனது காதல்

கொட்டியது 
கண்களில் 
கவிதைகள் 
துளித்துளியாய் .........   

18 comments:

Suji... said...

Nice feel :) Keep it up...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காதல் வந்துவிட்டாளே கவிதை மழை தான்...

அருமையான சிந்தனை...

முனைவர் இரா.குணசீலன் said...

;)

arasan said...

வலியை கூறுவது போல் உள்ளது சார் ..

ஹேமா said...

அன்பின் பிரிவும் வலியும் !

சத்ரியன் said...

//கொட்டியது
கண்களில்
கவிதைகள்
துளித்துளியாய் .........//

இந்த “காதல்” ஒன்று போதும்,

எழுத எதையாவது கொடுத்துக்கொண்டேயிருக்கும். ரசனையோடு...!

Thenammai Lakshmanan said...

கண்களில் கொட்டிய கவிதைத்துளி உப்பு.. விஜய்..

Kousalya Raj said...

மனதை வலிக்க செய்யும் வரிகள்.

ஸ்ரீராம். said...

கவிதைத் துளிகளா கண்ணீர்த் துளிகளா?

விஜய் said...

@ சுகா

நெஞ்சார்ந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ சௌந்தர்

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ குணசீலன்

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ அரசன்

மிகுந்த நன்றி நண்பா தொடர் ஊக்கத்திற்கு

விஜய்

விஜய் said...

@ ஹேமா

நட்சத்திர வார வாழ்த்துக்கள்

நன்றி ஹேமா

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

ஆமாம் நண்பா

ஏதாவது எழுதிக்கொண்டே இருக்கலாம்

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

மிகுந்த நன்றி அக்கா

விஜய்

விஜய் said...

@ கௌசல்யா

நெஞ்சார்ந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

கண்ணீர் துளிகள் எழுதும் கவிதை நண்பா

நன்றி நண்பா

விஜய்