இந்த நொடியில்
அடைந்திருக்கும்
எங்கோ ஒரு உயிர் தொப்புள் கொடி அறுபட்டு
விழித்திருக்கும்
எங்கோ ஒரு காதல் இதயம் ரணமாக
பிரிந்திருக்கும்
எங்கோ ஒரு காதல் பட்டாம்பூச்சியாய் சிறகடித்து
பறந்திருக்கும்
எங்கோ ஒரு தற்கொலை கடனால்
நிகழ்ந்திருக்கும்
எங்கோ ஒரு வருமான வரித்துறையின் சோதனை
நடந்திருக்கும்
எங்கோ ஒரு முதிர்கன்னியின் பெருமூச்சு
உஷ்ணமாகியிருக்கும்
எங்கோ ஒரு அணு கருமுட்டையை
துளைத்திருக்கும்
எங்கோ ஒரு சொறிநாய்
வண்புணர்ந்திருக்கும்
எங்கோ ஒரு கொலை முறைகேடால்
செய்யப்பட்டிருக்கும்
எங்கோ ஒரு மரம் அரக்க மனதுடன்
வெட்டபட்டிருக்கும்
எங்கோ ஒரு விதை மண்ணில்
விதைக்கப்பட்டிருக்கும்
எங்கோ ஒரு துளி மழை
தெளிக்கப்பட்டிருக்கும்
எங்கோ ஒருவரால் இந்த கவிதை
படிக்கப்பட்டிருக்கும்
3 comments:
'ஒருவரில்' ஒருவரால் இப்போது பின்னூட்டம் இடப்பட்டது! :)
இரண்டாவது...
வாழ்த்துக்கள்...
Smart.
Post a Comment