9.5.10

இயலும் அயலும்


சுக்கில சுரோணித
ஸ்தம்பிக்கும் பரியங்கம்

லிங்கநீட்சியின் நீட்டிப்பில்
திரவ லிக்னோகைன்

மூலாதாரம் முழிக்க
அகம் பிரம்மாஸ்மி

மரித்த பாம்பினனுக்கு
கார்ப்பரேட் காவிகள்

உச்சத்தின் எச்சத்தில்
உயிர்க்கும் சூல்கள்

இரவல் உயிரணு
இயந்திர கருப்பை

கருக்கல் வெளிர்க்கும்
பஞ்சவடி விருட்சங்கள்

சனங்களீர்க்கும்
ஜவுளிகடை பைபர்ஆப்டிக் மரங்கள்

பஞ்சகவ்யமும் துழாய்தீர்த்தமும்
பிரசாத மருந்தாக

இறைவனடி சேர்க்கும்
காலாவதி மருந்துகள்

சுற்றும் புவியின்
சுழற்சியில் சூடு

மானாவாரி வயலால்
அடுப்புறங்கும் வீடு

செயற்கை மானுடத்தால்
இயற்கையழிக்கும்
உலகையொருநாள்.....................

 

38 comments:

Unknown said...

//மானாவாரி வயலால்
அடுப்புறங்கும் வீடு//

கவலை தோய்ந்த வரிகள் ...

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு விஜய். :-)

விஜய் said...

@ கே.ஆர்.பி.செந்தில்

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ பா.ரா

என்ன பங்காளி சீக்கிரம் வந்துட்டீங்க

நன்றி பங்காளிமக்கா

விஜய்

ஸ்ரீராம். said...

சுருக்கமாக...
இயற்கையை நேசியுங்கள்...மீறாதீர்கள்...

ஹேமா said...

விஜய் நாகரீக மோகத்தால் தேவைகள் கூடியே இந்தக் கதி நமக்கு - இயற்கைக்கு !

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றியும் அன்பும் நண்பா

விஜய்

விஜய் said...

@ ஹேமா

நாகரீக மோகத்தில் பல இயற்கை வளங்களை இழந்து கொண்டு இருக்கிறோம்

நன்றி

விஜய்

ஜில்தண்ணி said...

நல்ல டைமிங் தான்

:))
சூப்பர்

விஜய் said...

@ ஜில்தண்ணி

பேரே கொளுத்துற வெயிலுக்கு இதமா இருக்கு நண்பா

மிகுந்த நன்றி

விஜய்

நேசமித்ரன் said...

நல்லாருக்கு விஜய்

Kala said...

செயற்கை மானுடத்தால்
இயற்கையழிக்கும்
உலகையொருநாள்\\\\\\


இப்போது கொஞ்சம்,கொஞ்சமாய்
அழிஞ்சுகிட்டே இருக்கு...

முழுமையாய் அழியப் போகிற
நாளை நான் ஆவலுடன்
எதிர்பார்க்கின்றேன் விஜய்!

நல்ல சிந்தனை வரிகள் விஜய்
ம்ம்ம்ம...எல்லாம் புறக்குடத்தில்
ஊற்றிய நீர்தான்!!

விஜய் said...

@ நேசன்

தொடர்ந்த அன்புக்கும் வாழ்த்திற்கும் மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ கலா

ஒரு வலைப்பக்கம் ஆரம்பிக்க சொன்னா கேட்க மாட்டேங்கிறீங்க

நிரம்ப நன்றியும் அன்பும் சகோதரி

விஜய்

Anonymous said...

// ஹேமா said...

விஜய் நாகரீக மோகத்தால் தேவைகள் கூடியே இந்தக் கதி நமக்கு - இயற்கைக்கு !//

இதையே யானும் சொல்லிக்கொள்கிறேன்..

விஜய் said...

@ தமிழ்

நன்றி சகோதரி

விஜய்

சிவாஜி சங்கர் said...

அண்ணே., நல்லாருக்கு... உங்கள் தனி சிறப்பான வரி வடிவத்தில்...

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

என்னருமை தம்பிக்கு நன்றிகள்

விஜய்

அன்புடன் மலிக்கா said...

சகோதரா மிகவும் அருமை. சில வார்த்தைகள்தான் எனக்கு புரியவில்லை.



நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்..
http://fmalikka.blogspot.com

விஜய் said...

@ மலிக்கா

நன்றி சகோதரி

அவசியம் பார்க்கிறேன்

விஜய்

Kala said...

ஒரு வலைப்பக்கம் ஆரம்பிக்க
சொன்னா கேட்க
மாட்டேங்கிறீங்க\\\\\\

விஜய் உங்களுக்காகவும் ஹேமாவுக்காகவும்
நான் ஆரம்பிக்கவில்லை,ஏன் தெரியுமா?
அப்புறம் உங்கள் வலைத் தளத்தில்
பின்னோட்டம் இட யாரும் இருக்கமாட்டார்கள்
ஆஹ்ஹஹா,.......ஆஹ்ஹஹாஹா..

என் தங்கராசாவே மிக்க நன்றி.

விஜய் said...

@ கலா

ஆமாம், உண்மைதான் நீங்கள் பின்னூட்டமிடாத எனது பதிவு சிறக்காது.

தங்கராசாவெல்லாம் இல்லீங்க, கருப்பு ராசாதான்

விஜய்

அன்புடன் நான் said...

//மானாவாரி வயலால்
அடுப்புறங்கும் வீடு//

கவிதை நிதர்சனம் பேசுகிறது.

பாராட்டுக்கள் விஜய்.

விஜய் said...

@ அரசு

நிதர்சன வாழ்த்துக்கு நன்றி நண்பா

விஜய்

Unknown said...

nice vijay i am enjoying vijay to your blogs

விஜய் said...

@ Priya1986

Thanks Priya for your visit & wishes

visit often

Vijay

புலவன் புலிகேசி said...

இந்த உலகழிக்கும் திருநாள் விரைவில் வரும் அண்ணா...

விஜய் said...

@ புலவன் புலிகேசி

ஆம் தம்பி

புவியை காப்பாற்ற ஒவ்வொருவரும் முயலவேண்டும்

நன்றி

விஜய்

Admin said...

அருமை... இரசித்தேன்

VELU.G said...

//
செயற்கை மானுடத்தால்
இயற்கையழிக்கும்
உலகையொருநாள்.....................//

உண்மை தான்

கவிதை அருமை

விஜய் said...

@ சந்ரு

நீண்ட நாளாகி விட்டது நண்பா பார்த்து

மிகுந்த அன்பும் நன்றியும் நண்பா

விஜய்

விஜய் said...

@ வேலு.ஜி

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

விஜய்

Thenammai Lakshmanan said...

இறைவனடி சேர்க்கும்
காலாவதி மருந்துகள்

சுற்றும் புவியின்
சுழற்சியில் சூடு

மானாவாரி வயலால்
அடுப்புறங்கும் வீடு//

இந்த முன்றும் அருமை.. தலைப்பு மிக அருமை விஜய்

கமலேஷ் said...

உண்மைதான் தோழரே...நல்ல கவிதை...வாழ்த்துக்கள்...

விஜய் said...

@ தேனக்கா

நன்றி அக்கா

விஜய்

விஜய் said...

@ கமலேஷ்

நன்றி நண்பா

விஜய்

பனித்துளி சங்கர் said...

////மானாவாரி வயலால்
அடுப்புறங்கும் வீடு////

தொலைந்துப்போனவைகளை மீண்டும் வார்த்தைகளில் பார்க்கிறேன் . அருமை

விஜய் said...

@ பனித்துளி ஷங்கர்

நெஞ்சார்ந்த நன்றி நண்பா

விஜய்