17.7.11

சும்பி





இதழ்களென்பது.......


நரம்புகளை முறுக்கேற்றி 
காம சங்கீதமிசைக்கும்
அற்புத வாத்தியம்


ஒற்றி எடுக்க எடுக்க 
உலராத 
அதிசய சுரபி 


இடப்படுமிடத்தில்
தடங்கள் வேறானாலும் 
வேர்களசைக்கும்
வினோத விழுதுகள் 


சப்த மாத்திரைகளின் 
வேறுபட்ட ஒலிகளில் 
உயிர்க்கூடசையும் 
உன்மத்த வித்தை 

விழி செருகி 

தலை சாய 
பரிமாறும் முத்தங்கள்
குறிசேரா

சைவக்கலவி 


யாருக்கோ 
இடப்படாத 
முத்தமொன்று 
உறைந்தே கிடக்கிறது 
ஒவ்வொருவரின் 
உதடுகளிலும் ................

14.7.11

சாயும் நாற்காலி



98ல் வாங்கிய கணிணி
பரணில் தூங்க 
மடிக்கணினி 
அலங்கார மேசையில் 


நேஷனல் டேப் ரெகார்டர் 
ஒட்டடை படிய 
ஐ பாட் அலறுகிறது 


லேண்ட்லைன் ஒலித்து
பல நாளான பொழுதும் 
பிளாக்பெர்ரி அழைக்கிறது 


பழையதுகளை ஒதுக்கியே 
வாழ்கிறது இளையதுகள் 


ஈசி சேரில் அறையின் 
மூலையில் நான்
என்னை நிரப்புபவன் 
யாரோ ? 
   

26.6.11

குட்டிக்கவிதைகள்




எல்லை 

தெருவோரம்
சிறுநீர் கழித்து 
எல்லையறிகிறார்கள்
மாக்கள் 



சாம்பல் 

ஆஷ்ட்ரே 
நிரப்புகிறது 
காதல் 
சாம்பல் 


23.6.11

தனித்திரு



கவிதைஎழுத 
கருப்பொருள் தேடினேன் 

உருவாக்கிய எந்தை

கருவாக்கிய யாய்

திருவாகிய இறை   

தருவுறை வன்னி 

கிட்டவில்லையெதுவும்

உன் மணவாழ்விற்கு   
எருவாகிய எனது காதல்

கொட்டியது 
கண்களில் 
கவிதைகள் 
துளித்துளியாய் .........   

7.6.11

நாணயம்



கோயில் வாசல் 
பார்வையற்றோனின் 
கிழிசல் துண்டில் 
புண்ணியம் தேடும் 
பொய் முகங்கள் 
சிதறிக்கிடக்கின்றன 
நாணயமற்று........