2.1.14
28.12.13
26.11.13
சில ஹைகூக்கள் - 4
1)
பிண ஊர்வலத்தின்
பின்னால்
எதிர்கால பிணங்கள்
2)
ஆற்றின்
கொப்பூழாய்
முழு நிலா
3)
பதினைந்தே நாட்களில்
பூப்பெய்தும்
அம்புலி
அம்புலி
14.11.13
கவிதைகளிரண்டு - 3
எனக்கு பிடித்த
எனது கவிதைகள்
எதுவுமேயில்லை
எனது கவிதைகள்
எதுவுமேயில்லை
விதை தூவிக்கொண்டு
இருக்கிறேன்
என்றோ முளைத்து
எவ்வாறேனும் பூத்து
என்றைக்காவது கனியும்போது
எவ்வாறேனும் பூத்து
என்றைக்காவது கனியும்போது
எனது மற்ற கவிதைகளும்
எனக்கு பிடித்துப்போகுமென்ற
நம்பிக்கையில் ,,,,,,,,,,,,,,,,,,,
2)
தயவு செய்து
நகங்களை வெட்டாதே
நகங்களை வெட்டாதே
எனது மெய்யில்
அவையிடும் குறிகள்
உனது காமக்கையெழுத்து
அவையிடும் குறிகள்
உனது காமக்கையெழுத்து
14.10.13
ராஜா ராணி
1)
கவிதையின்
முதல் வரியிலிருந்து
கடைசி வரிவரை
ஏதாவது இட்டு
நிரப்பினாலும்
அந்த ஏதாவதில்
நீ மட்டுமே
இருக்கிறாய் !!!!
2)
திசையெட்டும்
கொடி பறந்த
ராஜாவிற்கு
துரித ஸ்கலிதம்
நிலவின்
விசும்பலில்
நீள்கிறது
ராணியின்
இரவுகள்........
Subscribe to:
Posts (Atom)




